இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..!

இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது.

இதனிடையே,  ஜூலை மாதம்  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டி (ஜூலை 13, 16, 19) மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் (ஜூலை 22, 24, 27) பங்கேற்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

மேலும்,  இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி விளையாட இருப்பதால் , இந்திய இரண்டாம் தர அணி இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவித்தார். இதில் ஐபில் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் இந்த அணியின் கேப்டனாக, ஷிகர்தவான் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது, இந்திய அணியின் பயிற்சி குழுவினர் இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களுக்கு பயிற்சியளித்து வருவதால், இலங்கை தொடருக்கு ட்ராவிடை நியமிக்க முயற்சி செய்தனர். அந்தவகையில், இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளை சிறப்பாக பயிற்சியளித்த முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதைப்பற்றி கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், ‘இலங்கை அனுப்பவிருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், இவர் இளம் இந்திய வீரர்களை ஏற்கனவே சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அதனால், இலங்கைக்கு செல்ல இருக்கும் வீரர்களை சிறந்த முறையில் ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க முடியும்’ என்று கூறியுள்ளார். மேலும், இலங்கையில் விளையாட இருக்கும் இந்திய அணியின் வீரர்களின் பெயர் இந்த மாத இறுதியில் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

5 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

7 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

8 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

8 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

8 hours ago