ரபேல் போர் விமானம்: அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் …!விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் …!

ரபேல் போர் விமானம்: அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் …!விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் …!

ரபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2015 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது, டசால்ட் நிறுவனத்துடன் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 126 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி செய்துகொண்ட ஒப்பந்தத்தால், ஒரு விமானத்தின் விலை 300 சதவீதம் அதிரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களுக்கு 56 ஆயிரம் கோடி வழங்குவதா என காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைக்க, பாஜக தலைவர்கள் இதை கடுமையாக மறுத்தனர்.
Image result for ரபேல்
காங்கிரஸ் ஆட்சியில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட பிரதமர் மோடி செய்து கொண்ட ஒப்பந்தம் சிறப்பானது என அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வந்தனர். இதனிடையே, இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதிலும் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்த பேரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு விசாரித்தது.அதில் சட்ட ஆய்வு ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபடும். சில விஷயங்களுக்காக இதில் தலையிட்டோம்.அதேபோல்  ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கியுள்ளார்.அதேபோல் ரபேல் விமான ஒப்பந்தத்தில் விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *