ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டுகள் சிறை.!

ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டுகள் சிறை.!

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஈக்வேடார் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரபேல் கொரியா. இவர் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்துள்ளார். 

இவர் 2012-2016-ஆம் ஆண்டு கால தேர்தல் பிரச்சாரத்தின் போது சுமார் 7.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணை முடிந்து தற்போது வருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ரபேல் கொரியா தற்போது ஈக்வேடாரில் இருந்து பெல்ஜியத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube