ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அப்பாவும், அதிமுக வேட்பாளர் இன்பதுரையும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அப்பாவு 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.
இதனால், அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில் கடைசி மூன்று சுற்று வாக்குககளும், தபால் வாக்குகளிலும் முறைகேடு நடைபெற்றதாக கூறினார்.
மேலும், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு விடுமாறு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மீண்டும் வாக்கு எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,ராதாபுரம் தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை விபரங்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…