புதுக்கோட்டை சிறுமி கொலை செய்த வழக்கு.. தப்பியோடிய கைதி பிடிபட்டார்!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பியோடிய நிலையில், அவரை பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர்.

கைது செய்த அவரை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனயில் இருக்கும்போது ராஜா திப்பியோடினர். மருத்துவமனையில் கைவிலங்கை உருவிக்கொண்டு தப்பியோடிய ராஜாவை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், தப்பியோடிய கைதி ராஜா பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.