புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறும் – கவர்னர் தமிழிசை!

புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறும் என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல புதுச்சேரியிலும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், கொரோனா தொற்றை ஒழிக்கும் விதமாகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோயிலிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருபுவனை எம்எல்ஏ அங்காளன், சுகாதாரத்துறை செயலாளர் அருண், மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பின்பதாக செய்தியாளரை சந்தித்து பேசிய கவர்னர் தமிழிசை, புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்திருப்பதாகவும், தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்வதில் சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி திருவிழாவில் நேற்று மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறிவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு எனவும், இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது என்ற பெருமையை நாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அனைவரும் உற்சாகம் குறையாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதன் பின்பதாக கவர்னர் தமிழிசை திருபுவனை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்ததுடன், அங்கு உள்ள வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

Rebekal

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

46 mins ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

2 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

3 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

4 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

4 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

5 hours ago