புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.!

புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு.!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், பல பிரச்சனைகளை தாண்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பதான் திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர். மேலும் காலை 10 மணி முதல் மாலை 7 வரை மதுக்கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மது விற்பனைக்கு மட்டுமே அனுமதி என்றும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் பேருந்துகள் தனிமனித இடைவெளியுடம் இயக்கவும், அனைத்து வணிக வளாகங்களும், தொழிற்சாலைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube