மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்ட புதுச்சேரி சபாநாயகர்….!

மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்படுகிறார் புதுச்சேரி சபாநாயகர் செல்வம். 

புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டமானது செப்-3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.