புதுச்சேரி துணை சபாநாயகராக பொறுப்பேற்றார் எம்.எல்.ஏ. ராஜவேலு…!

புதுச்சேரி துணை சபாநாயகராக பொறுப்பேற்றார் எம்.எல்.ஏ. ராஜவேலு.

புதுச்சேரியில் நேற்று துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு நெட்டப்பாக்கம்  தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை  சொந்தர்ராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமி  எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் ராஜவேலுவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.