அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… அறிவித்தார் புதுவை முதல்வர்…

அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அறிவித்துள்ளார்.

புதுவையில், நடைபெற்ற நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுவை முதல்வர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர்,  அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும் என்று தெரிவித்தார்..

author avatar
Kaliraj