ஊரடங்கு உத்தரவிற்கு பின் திறக்கப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை!

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை 67 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், 67 நாட்களாக மூடப்பட்டிருந்த, புதுச்சேரி கடற்கரை சாலை தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போது, 5-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.