ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் – தமிழக காவல்துறை.
தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறிய 4,45,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9.98 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளிய சுற்றிய 5,78,100 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.