சாத்தான்குளம் விவகாரம்.! சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம்.!

நேற்று இரவு தந்தை, மகன் இறந்த வழக்கை 302 (கொலை) பிரிவு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஸை சி.பி.சி.ஐ.டி கைது செய்தனர்.

இந்நிலையில், எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பலர் வரவேற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, எம்.பி திருமாவளவன் சாத்தான்குளம் காவல்வதை படுகொலையை விசாரிக்கும் சிபிசிஐடி பிரிவு போலீசார் மீது கொலை வழக்காகப் பதிவு செய்திருப்பது ஆறுதலையும், நம்பிக்கையையும் அளிக்கிறது என கூறினார்.

மேலும், இவ்விசாரணையே சிபிசிஐடி  தொடரவேண்டும். சிபிஐ-யிடம் விசாரணையை ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இதைதொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு சாத்தான்குளம் காவல்வதை படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் ZOOM இணைப்பு மூலம் நடைபெறவுள்ளது.

author avatar
murugan