போராட்டம் நடத்தும் விவசாயிகள் சீனப் படைகளை போல நடத்தப்படுகிறார்கள் – அசாதுதீன் ஓவைசி!

போராட்டம் நடத்தும் விவசாயிகள் சீனப் படைகளை போல நடத்தப்படுகிறார்கள் – அசாதுதீன் ஓவைசி!

டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல அரசாங்கத்தால் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் புதிய வேளாண் சட்டம் மற்றும் தொடர்ச்சியான விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக மத்திய அரசை குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல நடத்தப்படுவதாகவும், சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது. ஆனால் பிரதமர் மோடி சீனாவின் பெயரை உச்சரிக்கக் கூட மறுக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய சீன எல்லையில் 20 ராணுவவீரர்களை சீனா கொன்றதாகவும், அவர்களது தியாகத்தை மத்திய அரசாங்கம் வந்துவிட்டதாகவும கூறியுள்ளார். மேலும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையின் அருகே சீனா ஒரு கிராமத்தைஅமைத்து உள்ளதாகவும், சீன ராணுவத்தின் இந்த செயலை சீனாவிடம் சொல்வதற்கு கூட நமது அரசாங்கத்திற்கு தைரியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube