சிம்புவை 20 கிலோ எடை கூட்ட சொன்ன தயாரிப்பாளர்.! பேரதிர்ச்சியாக ரசிகர்கள்.!

பத்து தல படத்திற்காக சிம்புவை 20 கிலோ எடை ஏற்ற கேட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர். அதற்கு சிம்பு தரப்பு மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் தற்போது தான் தனது பழைய நிலைக்கு வந்துள்ளார் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். முன்னர் சிம்பு எடை கூடி, இது சிம்புதானா என கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார்.

மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றிபெற வில்லை. அதன் பின்னர், கடுமையான உடற்பயிற்சிகள் செய்து மீண்டும் தனது ஸ்லிம் உடற்கட்டிற்கு வந்து ஸ்டைலான சிம்புவாக மாறியுள்ளார். அந்த ஸ்லிம் தோற்றத்தில் வரும் வாரம் ரிலீஸ் ஆக உள்ள மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும், அடுத்தடுத்த பட ஷூட்டிங்கில் பிஸியாகியுள்ளார் சிம்பு. அவர் குண்டாக இருக்கும் போது பத்து தல எனும் படத்தை ஆரம்பித்தனர். அதில் சிம்பு நீண்ட கௌரவ தோற்றம் போல, ஒரு டான் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. கெளதம் கார்த்திக் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார்.

தற்போது மீண்டும் அந்த பட ஷூட்டிங் ஆரம்பிக்க பத்து தல தயாரிப்பாளர் விரும்பி, சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அவரும் சரி நடித்து கொடுக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் கூறிய ஒரு கண்டிஷனை கேட்டு சிம்பு மட்டுமல்ல அவரது ரசிகர்களும் பேரதிர்ச்சியாகியுள்ளனர்.

காரணம் என்னவென்றால், பத்து தல தயாரிப்பாளர், அந்த படத்தில் சிம்பு டான் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியுள்ளதால், சிம்புவை 20 கிலோ எடை ஏற்றி குண்டாக மாற சொல்லியுள்ளார். சிம்புவே இப்போதான் அந்த குண்டான தோற்றதில் இருந்து ஒல்லியாக மாறி ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளார். மீண்டும் குண்டாக மாற சொல்லுகிறாரே என சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சிக்குளாகி உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.