யுனிசெப் நிறுவனத்தின் மனிதாபிமான விருதினை பெறும் பிரியங்கா சோப்ரா!

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஐ.நா அமைப்புடன் இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், யுனிசெப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பிரியங்கா சோப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு விருது வழங்கவுள்ள யுனிசெப் அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று தெரிவித்துளளார். மேலும், இவருக்கு விருது வழங்கும் விழா, நியூயார்க்கில், டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.