பிரியா கல்யாணராமன் மறைவு – கனிமொழி எம்.பி ட்வீட்

பிரபல பத்திரிகையான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட். 

தமிழின் வார நாளிதழ்களில் பிரபல பத்திரிகையான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் . இவருக்கு வயது 56. இவர் இன்று திடீரென சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூத்த பத்திரிகையாளரும், சிறந்த எழுத்தாளரும், குமுதம் ஆசிரியருமான பிரியா கல்யாணராமன் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.’ தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment