கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் டெல்லி தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கும் நிலையில், இந்த ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டணத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். இந்நிலையில், தனியார் சேவைகள் பல மக்களுக்கு ஒரு புறம் உதவுகிறது, ஆனால், மறுபுறம் சுரண்டுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகபட்சமாக கட்டணம் வசூலித்து வரும் நிலையில், இனி எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகபட்சமாக 1,500 ரூபாயும், அடுத்த 10 கிலோ மட்டருக்கு பிறகு 1 கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வரையும் வசூலிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பி.எல்.எஸ் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாயும், அடுத்த பத்து கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வீதமும் வசூலிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏ.எல்.எஸ் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 4 ஆயிரம் ரூபாயும், அடுத்த பத்து கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வசூலிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், எந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை மீறுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது ஓட்டுனர உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆம்புலன்சின் பதிவு சான்றிதழ் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…