கைதி 2 எப்போது..?? தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்..!!

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கொடுத்துள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். மேலும் கைதி படத்தின் முடிவில் கூட இரண்டாம் பாகம் வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைபோல் படத்தின் வெற்றி விழாவில் கைதி 2 உருவாகும் என்றும் கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து கைதி  2 குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமூக வலைதளபக்கங்களில் ரசிகர் ஒருவர் கைதி 2 குறித்து கேட்டதற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் “கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக ‘கைதி 2’ உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.