38 C
Chennai
Sunday, June 4, 2023

ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை..முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று...

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

சிறை காவலர் தீக்குளிப்பு – எஸ்.ஐ சஸ்பெண்ட்!

சிறைக்காவலர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

திருச்சி லால்குடி காவல் நிலைய வாசலில் செம்பரை கிராமத்தை சேர்ந்த சிறைக்காவலர் ராஜா தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உறவினர்களிடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனை தொடர்பாக சரியாக விசாரணை நடத்தவில்லை என கூறி சிறை காவலர் ராஜா தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

தீக்குளித்த சிறை காவலர் ராஜா, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறை காவலர் ராஜா தீக்குளித்த நிலையில், புகாரை சரிவர விசாரிக்கவில்லை என எஸ்ஐ பொற்செழியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியின் பரிந்துரையின் பேரில் எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டார்.

இதனிடையே, தனது சகோதரர், மனைவிம், மகள் தான் தனது மரணத்திற்கு காரணம் என உயிரிழந்த சிறைக்காவலர் ராஜா வாக்குமூலம் அளித்துள்ளதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்ஐ பொற்செழியன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.