கைலாசாவில் ஓட்டல் திறக்க அனுமதி கோரிய மதுரை நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் – நித்தியானந்தா

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கோரிய தமிழகத்தை சேர்ந்த நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நித்தியானந்தா பதில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய 5 வகையான நாணயங்களை வெளியிட்டார். இந்து மதத்தை பின்பற்றும் 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என அறிவித்துள்ளார். இந்த பொற்காசு 11.6638038 கிராம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கேட்டு மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி குமார் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கைலாசா நாட்டில் ஓட்டல் துவங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் விதமாக நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹோட்டல் துவங்குவதற்கு தனது நிர்வாகிகளிடம் முன்னுரிமை அளிக்க செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்