பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை நாளை வெளியிடவுள்ளார்.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை வீடியோ கான்பரன்சின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும்,இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி ரூ.125 என்ற சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார், மேலும் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாஜியின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 1 ஆம் தேதி 2021 அன்று மாலை 4:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாஜி, “ஹரே கிருஷ்ணா இயக்கம்” என்று பொதுவாக அறியப்படும் கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சங்கத்தை (இஸ்கான்) நிறுவினார்.இந்த சங்கம் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழி பெயர்த்து, வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் சிறப்பான பங்கை வகிக்கிறது.
மேலும்,சுவாமி பிரபுபாதாஜி நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவி, பல புத்தகங்களை எழுதி, பக்தி யோகாவின் பாதையை உலகிற்கு கற்பித்தார்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக,பிரதமர் மோடி,75 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…