ராஜஸ்தானில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி.
ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் “அமைதி சிலை” அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் ( Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj) 151 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள “அமைதி சிலையை ” வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.151 அங்குல உயரமுள்ள இந்த சிலை எட்டு உலோகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இவர் 1870-1954 காலப்பகுதியில் வாழ்ந்த துறவி.வெகுஜன நலனுக்காகவும், கல்வியின் பரவலுக்காகவும், சமூக தீமைகளை ஒழிப்பதற்காகவும் இவர் அயராது உழைத்தார், எழுச்சியூட்டும் இலக்கியங்களை எழுதியுள்ளார். மேலும், சுதந்திர இயக்கத்திற்கும், சுதேசியின் காரணத்திற்கும் தீவிரமான ஆதரவை வழங்கினார். அவரது உத்வேகத்துடன், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் ஆய்வு மையங்கள் உட்பட 50 -க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன.
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…