உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் – பிரதமர் நரேந்திர மோடி

உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், உங்களுடைய பெற்றோர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளார்கள், அவர்களுடைய தியாகம் உங்களை வளர்த்திருக்கிறது.நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம்.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம்.உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம்.இந்தியாவிலேயே மூத்த மொழி தமிழ்மொழி.மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கடின உழைப்பால் அசாத்தியமானவற்றை சாத்தியமாக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.