பிரதமர் மோடி வருகை…! புதுச்சேரியில் பாதுகாப்பு ஒத்திகை…!

பிரதமர் மோடி வருகை…! புதுச்சேரியில் பாதுகாப்பு ஒத்திகை…!

புதுச்சேரியில் அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவர் பயணம் செய்யும் சாலை வழித்தடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை  மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். இவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி  வைக்கின்ற நிலையில், தேர்தல் பரப்புரையும் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரியில் அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதனையடுத்து, அவர் பயணம் செய்யும் சாலை வழித்தடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை  மேற்கொண்டனர். மாநில காவல்துறையினருடன் டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு அதிகாரிகளும், இந்த ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube