பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா! டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த விழா, ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உட்பட 8,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் மற்றும் துணை இராணுவ படையினர் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய இடங்களில் துப்பாக்கி சுடுவதில் திறன் பெற்ற ஸ்னைப்பர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் முக்கியமான சாலைகளில் மாலை 4 மணி முதல் 9 மணி வரை இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை. மேலும், மாற்று சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment