பிரதமர் மோடியின் பேச்சு அவரது பேச்சுக்கும், தரத்துக்கும் அழகல்ல – வைகோ
பிரதமர் மோடியின் பேச்சு அவரது பேச்சுக்கும், தரத்துக்கும் அழகல்ல – வைகோ
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது.
திருப்பூர் மாவட்டம், தாரப்புரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும், மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இதுகுறித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் பேச்சு குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறுகையில், தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது அவரது பதவிக்கும், தரத்துக்கும் அழகல்ல. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது என தெரிவித்துள்ளார்.