உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..!

உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட். 

முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர். அவர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.