இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…..!

அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக  தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக வழங்கினார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி, இன்று, 10.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க்க உள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்கிறார். பின்னர், கார் மூலம் நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு செல்கிறார்.

அதனை தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதாகவும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.