சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இன்று  பிரதமர் நரேந்திர மோடி சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை திறந்து வைக்கிறார்.

சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இதனால்  அந்தமான் பகுதிகளில் இணையத்திற்கு ஏற்படும் செலவு குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  காணொளி காட்சி மூலமாக அந்தமான் மற்றும் நிக்கோபாருடனான இணைப்பை அதிகரிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Join our channel google news Youtube