விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்தை ‘தலைவா’ என குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.!

ரஜினிகாந்த் தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வித்தியாசமான கதாபாத்திரங்கள், அனைத்து தலைமுறை ரசிகர்களையும், தனது நடிப்பால் கவர்ந்த ரஜினிகாந்த் ‘தலைவா’வுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கடின உழைப்பால் உயர்ந்த அவருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்