மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் நபருக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் மதுரை நபர் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி.!

மதுரையில் சலூன் நடத்தும் மோகன் என்பவர் தனது மகனின் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு நிவாரணமாக அளித்துள்ளார். இதனை பிரதமர் மோடி மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில், தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் ஏழை மக்களுக்கு உதவ மோகன் செலவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுகள் என்று மோடி கூறியுள்ளார். மக்களின் ஓத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்