நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்!

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, ஹாக்கி ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் அவனி, தடகளம் சுமித், பேட்மிண்டன் பிரமோத் பகத், கிருஷ்ணா, துப்பாக்கி சுடுதல் மணீஷ் நர்வால், கிரிக்கெட் மிதாலி ராஜ், கால்பந்து சுனில் சேத்ரி ஆகியோருக்கு டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்