மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர்…! நலம் விசாரித்த பிரதமர் மோடி…!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவாமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தின் உடல்நலம் குறித்து, பிரதமர் மோடி விசாரித்துள்ளர். 

இன்று  காலையில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த  நிலையில், அவர் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக வங்க தேசம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இது குறித்து  அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், ராம்நாத் கோவிந்தின் மகானை தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.