கொரோனா பரிசோதனைக்கு வர பிரேமலதாவுக்கு அழைப்பு..!

பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைத்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறிய நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா உறுதியான நிலையில், பிரேமலதாவையும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்.

குடும்பத்தில் யாருக்காவது கொரோனா உறுதியானால், அனைத்து உறுப்பினர்களும் பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்ற அடிப்படையில் பிரேமலதா விஜயகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேமுதிக தரப்பில் இருந்து இது பரப்புரையை திசைதிருப்பும் முயற்சி என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan