டவ்-தே இன்றிரவு கரையை கடக்கலாம் என கணிப்பு..!

டவ்-தே இன்றிரவு கரையை கடக்கலாம் என கணிப்பு..!

இன்று இரவு டவ்-தே புயல் கரையைக் கடக்கலாம் என்று அகமதாபாத் வானிலை மையம் கணித்துள்ளது.

குஜராத்தில்  இன்று இரவு டவ்-தே புயல் கரையைக் கடக்கலாம் என்று அகமதாபாத் வானிலை மையம் கணித்துள்ளது. இதுகுறித்து அகமதாபாத் வானிலை மையம் கூறுகையில், அதி தீவிர புயலாக டவ்-தே மாறியுள்ளது. புயல் வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து மாலையில் குஜராத் கரையை அடையும்.

குஜராத் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே இரவு டவ்-தே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube