எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்! பிரணாப் முகர்ஜி மகன் ட்வீட் !

எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து கூறிய மருத்துவமனை நிர்வாகம், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்வீட்டர் பக்கத்தில்,’உங்கள் பிரார்த்தனையின் காரணமாக எனது தந்தையின் இரத்த ஓட்டம் சீரடைந்துள்ளது. எனது தந்தையின் உடல்நிலை தொடர்ந்து குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள், நன்றி.’ என தெரிவித்துளளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.