குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிய நடிகர் பிரசன்னா.!

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிய நடிகர் பிரசன்னா.!

நடிகர் பிரசன்னா சிறு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு  நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.

நடிகர் பிரசன்னா மாஃபியா படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி தயாரிக்கும் “நாங்க ரொம்ப பிஸி” படத்தில் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தில் ஸ்ருதி மராத்தே ,ரித்திகா சென் ,ஷாம் , யோகி பாபு, அஸ்வின் காக்கமனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சன்டிவியில் தீபாவளி தினத்தன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் என்றில்லாமல் பல உதவிகளையும் செய்து வரும் பிரசன்னா தற்போது சிறு குழந்தை ஒன்றின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். நாங்க ரொம்ப பிஸி படத்திற்காக செட்டிநாடு மருத்துவமனையில் ஷூட்டிங் சென்ற பிரசன்னாவிடம் ஒரு தம்பதியினர் அவர்களது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தயக்கத்துடன் உதவி கேட்டுள்ளனர் . உடனடியாக அந்த மருத்துவமனையில் உள்ள சம்பந்தப்பட்ட மருத்துவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார் பிரசன்னா. அதனையடுத்து பிரசன்னா அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ருபாயை வழங்கி உதவியுள்ளார். தங்களது குழந்தைக்கு உதவிய பிரசன்னாவிற்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்ததால் பிரசன்னாவின் இந்த நற்செயல் வெளி வந்தது .

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *