கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் சட்டத்தின் முன் யாராக இருந்தாலும் பதில் சொல்ல வேண்டும்!

அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்தில், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பதில் சொல்லியாக வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ்க்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment