சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை 4:06 மணிக்கு 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தின் மையம் சுமத்ராவின் தலைநகரில் இருந்து 197 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  கூறியது.

இதுவரை கிடைத்த சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில், எந்த சேதமும் இல்லை மற்றும் உயிர் சேதமும் இல்லை. தெற்கு நியாஸ் தீவில் இந்த நடுக்கம் வலுவாக உணரப்பட்டது.

author avatar
murugan