மத்திய பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு தென்கிழக்கே 28 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.