தூத்துக்குடியில் நாளை இந்தந்த பகுதிகளில் மின்தடை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல் மற்றும் சாய்ந்துள்ள நிலையில் மின் கம்பங்கள் சரி செய்தல்உள்ளிட்ட பணிகள்மேற்கொண்டு வருவதால் நாளை தூத்துக்குடியில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, முத்தையாபுரம், தோப்பு தெரு , கிழக்கு தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, முஸ்லீம் தெரு, திருச்செந்தூர் மெயின் ரோடு, பாஞ்சாலங்குறிச்சி, கச்சேரி தளவாய்புரம், ஓட்டப்பிடாரம், ஈசிஆர் ரோடு,  பனையூர், ஆனந்தம்மடபுதுச்சேரி, மேல்மருதூர்,  பெரியார் நகர் , மேல அரசடி, வெள்ளாரம், ஆனந்த் நகர், வாலசமுத்துரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.