புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளிவைப்பு..!

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதிக்குஒத்தி வைக்கப்பட்டது.

அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தியைக் கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14-ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறிய காரணம் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி. எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு  வழக்கு தொடர்ந்தார்.

இதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆஜராக விலக்கு கேட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆஜராக விலக்கு அளித்து வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் விலக்கு பெற்றதால் ஆஜராகவில்லை. இதனால், வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதிக்குஒத்தி வைக்கப்பட்டது.

author avatar
murugan