#Breaking : அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் – மத்திய அரசு

எம்.பி.வெங்கடேசனுக்கு  கடிதத்தில்,  இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம் என அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ்குமார் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். 

அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, எம்.பி.வெங்கடேசனுக்கு  கடிதத்தில்,  இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம் என அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ்குமார் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

எம்.பி.வெங்கடேசன் அவர்கள், அஞ்சலக தேர்வை தமிழிலும் நடத்தத்தக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், இதற்க்கு பதிலளிக்கும் வண்ணம் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்.14-ம்  நடைபெறவுள்ள அஞ்சலக கணக்கர் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழிலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.