சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. 

கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றது. இன்று மேற்கு வங்கத்தில் கடைசி மற்றும் 8-ஆம் கட்ட தேர்தல் நிறைவு பெற்றது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா, டைம்ஸ் நவ், சி வோட்டர், இந்தியா நியூஸ், ஜான் கி பாத், இந்தியா டிவி, நியூஸ் 24 ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

 

author avatar
murugan