கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ்- பேராசிரியர் கைது..!

மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கோயம்பேடு தனியார் கல்லூரி பேராசிரியர் கைது

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, ஆபாச மெசேஜ் அனுப்பிய தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்ப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்த நிலையில், தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார்.

பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author avatar
murugan