பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை?

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. தற்பொழுதும் அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சினிமா துறையினர் தங்களது தொழிலை தொடங்குவதற்கு தற்போது அரசு அனுமதித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் டி ஆர் அவர்களின் மகன் சிம்பு அவர்கள் நடிப்பில் வெளியாகி கடந்த வருடம் வெற்றி பெற்ற வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பிறகு மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
கொரோன ஊரடங்கு காரணமாக தடைப்பட்டுவந்த இந்த படம் வருகிற நவம்பர் மாதம் மீண்டும் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் துவங்குவதற்கு முன் இருக்கக்கூடிய இந்த ஒரு மாத இடைவெளியில் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் சிம்பு ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இதன் மோஷன் போஸ்டர் வருகிற 26-ஆம் தேதி மதியம் வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகில் அதிக படங்களில் ஹீரோயினாக காட்சி கொடுத்த நந்திதா ஸ்வேதா அவர்கள் இந்தப் படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கிறார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் இவ்வாறு இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாரோ என்பது போன்ற சில பேச்சுகளும் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

41 mins ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

2 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

5 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

5 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

5 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

5 hours ago