பொங்கல் பரிசு தொகுப்பு…!நியாய விலைக்கடையில் வாங்க சென்ற விவசாயி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு …!

நியாய விலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வாங்க சென்ற விவசாயி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதோடு அதனோடு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது  ஆகும்.

இந்நிலையில்  நியாய விலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வாங்க சென்ற விவசாயி உயிரிழந்துள்ளார்.காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (60) என்பவர் நியாய விலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வாங்க சென்றபோது  கூட்ட நெரிசலில் சிக்கி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment