பொங்கல் பரிசு விவகாரம்: கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு …1

பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.சர்க்கரை பெறும் கார்டுதாரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்குமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் முறையீடை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Comment