பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தண்டனை போதாது தீர்வு வேண்டும்!!!!!இயக்குனர் கோபி நயினார்!!!!!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தண்டனை போதாது தீர்வு வேண்டும்!!!!!இயக்குனர் கோபி நயினார்!!!!!

  • அறம் பட இயக்குநர் கோபி நயினார்  இந்த சம்பவத்தை  கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • மேலும் இந்த கொடுங்குற்றத்திற்கு  தண்டனை போதாது தீர்வு வேண்டும் பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் கோபி நயினார் வலியுறுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனங்களையும் ,போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பல பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார்  இந்த சம்பவத்தை  கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசுகையில் ,பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை எதிர்த்து போரட்டங்களை நியாயப்படி அரசும், காவல்துறையும் தான் முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தை எதிர்த்து போராடுகிற மக்களை  தமிழக அரசு ஒடுக்கி வருகிறது.

எல்லா குற்றங்களுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும் என்பது தான் நம்முடைய கேள்வி. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் நீதி. மேலும் இந்த கொடுங்குற்றத்திற்கு  தண்டனை போதாது தீர்வு வேண்டும் பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் கோபி நயினார் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *